இப்படியாகிலும் ...!

 

 இப்படியாகிலும் ...!    இறுதிவரை...!! 

தொடுகைகளே உணர்வுகளின் கடத்தியாக 

உன்னை என்னிடம் கொண்டு சேர்த்ததோ...? 

பார்வைகளும் அதை கடத்தியே என் மனதை 

உன்னிடம் சேர்த்ததோ  ?

 அப்படியே இணைந்திருந்தோம் சிலகாலம்..... 

ஆனால் இணைவு தளர்ந்ததேனோ இன்று ; 

காலம் தந்த சோர்வா - இல்லை உணர்வுகளின் அதீதம் தந்த சோர்வா? 

அறியேன் - ஆனாலும் 

உன் பார்வை எல்லைக்குள் உள்ளேன் என்பதே, இன்று, 

என் மனம் கொள்ளும் நிம்மதி!  

இப்படியாகிலும் இருப்போம் இனி வரும் நாட்களில்...   

ஜன்னலுக்கு திரையாய், 

இருக்கைக்கு அழகு உரையாய், நுழைவாசல் முன் மிதியடியாய்! 

Comments

Popular posts from this blog

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?

Proposal sent to Rlys...!

விண்ணையும் தொடுவேன் !