இப்படியாகிலும் ...!

 

 இப்படியாகிலும் ...!    இறுதிவரை...!! 

தொடுகைகளே உணர்வுகளின் கடத்தியாக 

உன்னை என்னிடம் கொண்டு சேர்த்ததோ...? 

பார்வைகளும் அதை கடத்தியே என் மனதை 

உன்னிடம் சேர்த்ததோ  ?

 அப்படியே இணைந்திருந்தோம் சிலகாலம்..... 

ஆனால் இணைவு தளர்ந்ததேனோ இன்று ; 

காலம் தந்த சோர்வா - இல்லை உணர்வுகளின் அதீதம் தந்த சோர்வா? 

அறியேன் - ஆனாலும் 

உன் பார்வை எல்லைக்குள் உள்ளேன் என்பதே, இன்று, 

என் மனம் கொள்ளும் நிம்மதி!  

இப்படியாகிலும் இருப்போம் இனி வரும் நாட்களில்...   

ஜன்னலுக்கு திரையாய், 

இருக்கைக்கு அழகு உரையாய், நுழைவாசல் முன் மிதியடியாய்! 

Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?